தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 4, 2023, 3:25 PM IST

ETV Bharat / sukhibhava

Dengue: டெங்குவில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி: சில வழிகாட்டுதல்கள்!

Dengue Awareness 2023: மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் கொசுக்களால் பரவும் டெங்கு நோயில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது தொடர்பான சில வழிகாட்டுதல்கள் குறித்த சில முக்கிய தகவல்களைப் பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat

ஹைதராபாத்:நாடு முழுவதும் பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் டெங்கு தொடர்பான பீதியும் மக்கள் மத்தியில் எழத்தொடங்கி இருக்கிறது. கடந்த 19ஆம் நூற்றாண்டில் பரவத்தொடங்கிய இந்த டெங்கு காய்ச்சல் தற்போது, உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் நிலையில், உயிரைக் கொல்லும் அளவுக்குத் தீவிரமானதாக இருக்கிறது.

இதனால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த டெங்கு காய்ச்சலுக்கு குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படும் நிலையில், இந்த நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வது தொடர்பாக சில வழிகாட்டுதல்களைப் பார்க்கலாம்.

டெங்கு கொசு உருவாவதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்:மழை நீர் பல நாட்களாகத் தேங்கி நிற்கும் தண்ணீரில் தான் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. ஏடிசு என்ற இந்த கொசுக்கள் பூந்தொட்டிகள், வாளிகள், திறந்து கிடக்கும் பிளாஸ்டிக் டிரம், பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்டப் பல இடங்களில் மழை பெய்யும்போது தேங்கும் தண்ணீரில் இருந்து உருவாகிறது. இப்படி உருவாகும் இந்த கொசுக்கள் கழிவு நீர் மற்றும் அழுக்குகள் சேரும் இடத்தில் இருந்து வெளியேறி மனிதர்களைக் கடிக்கும்போது டெங்கு காய்ச்சல் உருவாகிறது. இதனால் உங்கள் சுற்றுப்புறத்தில் மழை நீர் தேங்காத வகையில் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

வீடுகளில் கொசுக்களை விரட்ட என்ன செய்யலாம்: கொசு பத்தி, கொசு கடிக்காமல் இருக்க கைகள் மற்றும் கால்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை க்ரீம்களை தேய்க்கலாம், மேலும், கடைகளில் விற்கப்படும் கொசு விரட்டி திரவங்களை வாங்கிப் பயன்படுத்தலாம். ஆனால், அதில் கவனமுடன் செயல்பட வேண்டும். குழந்தைகள் உள்ள வீடுகளில் அவை குழந்தைகள் கையில் எடுக்கும் இடங்களில் வைக்கக்கூடாது.

மேலும், அந்த கொசு விரட்டிகளின் பின்பக்கம் பரிந்துரைக்கப்பட்டுள்ள நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். வீடுகளில் ஈரம் தேங்கி நிற்காத வகையில் உலர்வுடன் வைத்துக்கொள்ளுங்கள்.

டெங்கு தொடர்பான விழிப்புணர்வுகளுக்கு முக்கியத்துவம்:பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும். டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை முறையாக கடைப்பிடிப்பதன் மூலம் கொசுக்களில் இருந்து நம்மையும், நம் சமூகத்தையும் பேணி பாதுகாக்க முடியும்.

டெங்கு குறித்துத் தெரியாத மக்களுக்கு இது தொடர்பான தகவல்களை எடுத்துக்கூறி ஒரு டெங்கு தடுப்பு போராளியாக மாற்ற முயற்சியுங்கள். உங்கள் வீடுகளில் இருந்து நீங்கள் சாலையிலோ அல்லது தெருக்களிலோ வீசி எரியும் பொருட்களில் தண்ணீர் தேங்கி அதில் உருவாகும் கொசுக்கள் பக்கத்து வீட்டிற்கு மட்டும் அல்ல உங்கள் வீட்டிற்கும் வரும் என்பதை உணர்ந்து சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க ஒத்துழையுங்கள்.

வீடுகளைக் கொசு வலைகளால் பராமரியுங்கள்:கொசுக்கள் வெளியில் இருந்து வீட்டிற்குள் வராதவாறு ஜன்னல்கள், கதவுகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கொசுவலைகளைப் பயன்படுத்துங்கள். கட்டில் மற்றும் குழந்தைகளுக்கான தொட்டில் உள்ளிட்டவற்றில் கொசு வலைகளைப் போட்டுப் பாதுகாப்புடன் வையுங்கள்.

குழந்தைகளுக்குப் பாதுகாப்புக்கான வகையில் ஆடைகள் அணிய வேண்டும்:காலை மற்றும் மலை நேரங்களில் கொசுத் தொல்லை அதிகமாகக் காணப்படும். இதனால் அந்த நேரங்களில் குழந்தைகளுக்கு கைகள் முழுவதும் மறையும் வகையில் சட்டை மற்றும் பேன்ட்களை அணிவித்துக்கொடுங்கள். மேலும் பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் டெங்கு பரவும் நிலையில் அதை தவிர்க்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுங்கள்.

இதையும் படிங்க:தந்தைக்கும் உண்டு தாய்ப்பால் ஊட்டுதலில் பங்கு!: ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details