கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வகுப்புகள் ஆன்லைனில் நடந்துவருகின்றன. இப்படி கணினி மூலம் கல்வி கற்கும் நேரம் அதிகமாயிருக்கு பட்சத்தில், நமது குழந்தைகளின் கண்களை பாதுகாப்பது மிக அவசியமாகிறது. அதனால் நாங்கள் இந்த கரோனா கால கண் பிரச்னை குறித்து கண் மருத்துவர் மஞ்சு பாட்டேவிடம் உரையாடினோம்.
- குழந்தைகளுக்கு வரும் பொதுவான கண் பிரச்னைகள் என்ன?
ஒளிவிலகல் குறைபாடுகளை குழந்தைகளில் பெருமளவில் சந்திக்கின்றனர். அதுமட்டுமின்றி ஒவ்வாமையாலும் கண் பிரச்னை ஏற்படுகிறது.
- குழந்தைகளுக்கு எப்போது கண்களைச் சரிபார்க்க வேண்டும்?
குழந்தைகள் மழலையர் பள்ளியில் படிக்கும்போது ஒரு வழக்கமான சோதனை செய்யலாம். இதன் மூலம் குழந்தைகளுக்கு 3 -5 வயது வரை பார்வை தொடர்பான சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிய முடியும். எந்தவொரு கண் பிரச்னையும் பெற்றோர் அல்லது குழந்தை மருத்துவரால் கண்டறிய முடியாவிட்டால், அவர்கள் உடனடியாக ஒரு குழந்தை கண் மருத்துவரை அணுக வேண்டும்.
- கண்களை எவ்வாறு கவனிப்பது?
படிக்கும் போதும், எழுதும் போதும் நன்கு ஒளி இருக்கக் கூடிய அறையில் இருக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட நேரம் மட்டும் டிவி பார்க்க அனுமதிக்கவும். மொபைல் தேவைப்படும் போது மட்டும் கொடுத்தால் போதும்.
- குழந்தைகளுக்கு ஏற்படும் கண் பிரச்னை எப்படி கண்டறிவது?