சென்னை: வீடு வெறும் குடியிருப்புக்கான அம்சம் அல்ல.. அங்கு நமக்கான மன நிம்மதி, ஆரோக்கியமான வாழ்வியல் சூழல் இருக்க வேண்டும். அதற்கு நாம் முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், வீடுகளில் மரம் மற்றும் செடி, கொடிகளை வளர்ப்பதுதான். வீடுகளில் சில வகையான மரம், செடி மற்றும் கொடிகளை வளர்ப்பதன் மூலம் நோய் நொடியற்ற வாழ்வையும், மன நிம்மதியான சூழலையும் அந்த வீட்டில் இருப்பவர்களால் பெற முடியும் என முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மூலிகை மருத்துவத்தின் அடிப்படையில் வீடுகளில் வளர்க்கப்படும் தாவரங்கள் அனைத்தும் நோய்கள் வந்த பிறகு அல்ல நோய்களே வராமல் தடுக்கும் அளவுக்கு மகத்துவம் பெற்றவை எனவும் மக்கள் தங்கள் வீடுகளில் தாவரங்களை வளர்க்க வேண்டியது இன்றைய சூழலில் கட்டாயம் எனவும் கூறப்படுகிறது. முன்னோர்கள் தங்கள் வீடுகளில் ஒட்டு திண்ணை கட்டுவதற்கும், துளசி மடம் வைப்பதற்கும், வேப்ப மரம் வளர்ப்பதற்கும் பின்னால் ஆயிரம் அர்த்தங்களை வைத்திருந்தனர். அது மட்டும் இன்றி, வீட்டைச் சுற்றி கொஞ்சம் நிலத்தை மிச்சம் வைத்திருப்பார்கள். அந்த நிலத்தில் சில வகையான மரங்கள், செடிகள் மற்றும் கொடிகளை நட்டு வைத்துத் தொடர்ந்து பராமரித்து வருவார்கள். அந்த வகையில் எந்தெந்த மரம், செடி, கொடிகளை வீட்டில் வளர்க்கலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
மரங்கள் | செடிகள் | கொடிகள் |
வேப்பமரம் | துளசி | மல்லிகை பூ |
சீத்தாப்பழ மரம் | கருவேப்பிலை | முல்லை பூ |
வாழை மரம் | தூதுவளை | மணிபிளான்ட் |
தென்னை மரம் | கட்றாழை | கோவைக்காய் கொடி |
பலா மரம் | கற்பூரவல்லி | அவரைக் கொடி |
முருங்கை மரம் | மாதுளை | பரங்கிக்காய் கொடி |
கொய்யா மரம் | எலுமிச்சை | பூசணிக்காய் கொடி |
மா மரம் | நந்தியாவட்டை பூ | பாகற்காய் கொடி |
பப்பாளி மரம் | கீரை வகைகள் | தாட்பூட் கொடி |
பெரு நெல்லி மரம் | பூலாங்கிழங்கு | புடலங்காய் |
அகத்திக் கீரை மரம் | மூங்கில் செடி | பீர்க்கன் காய் |
பாக்கு மரம் | சங்கு புஷ்பம் | கொடிபசலை கீரை |
சிறு நெல்லி மரம் | தொட்டா சிணுங்கி | முடக்கத்தான் கீரை |
கருநொச்சி | செம்பருத்தி | டிராகன் ஃபுரூட் |
சந்தனமரம் | வெட்சி பூ | வெள்ளரிக்காய் |
சப்போட்டா மரம் | நிலவேம்பு | சுரைக்காய் |