தீபம் + ஒளி = தீபாவளி. சாதி, மத வேறுபாடு இன்றி அனைவரும் கொண்டாடும் இந்த தீபாவளி பண்டிகை என்றாலே, பட்டாசு, இனிப்பு வகைகள், விளக்கு, புத்தாடை போன்றவைதான் முதலில் நம் நினைவிற்கு வரும். குறிப்பாக, நம்மை நாம் அலங்காரம் செய்துகொள்கிறோமோ, இல்லையோ, நம் வீட்டையும், வீட்டின் வாசலையும் நிச்சயம் அலங்கரிக்கத் தவற மாட்டோம்.
இப்படி நம்பிக்கையும் குதூகலமும் தரும் தீபாவளியை வித்தியாசமான விளக்குகளைக் கொண்டு, கொண்டாட வேண்டாமா! நமது எண்ணம்போல இல்லமும் ஜொலித்திட அகல் விளக்கு மட்டுமல்லாது, பூ விளக்கு, வாசனைத் திரவியம் நிறைந்த விளக்கு, ஜெல்லி விளக்கு, எலெக்ட்ரிக் விளக்கு எனப் பல வகை விளக்குகள் உள்ளன. அவை ஒவ்வொன்றின் சிறப்பையும் தற்போதுப் பார்ப்போம்.
பூ விளக்கு:
வண்ண வண்ண நிறங்களில் பூ வடிவில் இந்த விளக்குகள் கிடைக்கின்றன. பூக்கள் அச்சிடப்பட்ட கிளாஸில் அல்லது பூ வடிவிலேயே செய்யப்பட்ட இந்த விளக்குகள், கட்டாயமாக உங்கள் வீட்டிற்கு புதுப் பொலிவைக் கொடுக்கும்.
வாசனைத் திரவியம் நிறைந்த விளக்கு:
இல்லத்திற்கு ஒளியும், நறுமணமும் தரும் இந்த விளக்குகள் பலருக்கும் பிடித்தமானவை. இந்த விளக்குகளை ஏற்றினால் மனதில் ஒரு வித அமைதி ஏற்படுவதை உணரலாம். நம்பகத் தன்மை கொண்ட இயற்கைப் பொருட்கள் கடைகளில் தான் இதுபோன்ற விளக்கினை வாங்க வேண்டும். வேதிப்பொருட்கள் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட விளக்குகளை அறவே தவிர்த்து விடவும்.
ஜெல்லி விளக்கு: