திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் மண்டல துணை வட்டாட்சியரான சிவனாண்டி தனது சொந்த ஊரான செம்பட்டியில் இருந்து திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அவரது இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.
அப்போது சித்தலக்குண்டு அருகில் லாரியில் மணல் கொண்டு சென்றதை தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் லாரியை டிரைவர் நிறுத்தாமல் சென்று விட்டார். அந்த லாரியை பின்தொடர்ந்து சென்று நிறுத்த முயன்ற துணை வட்டாட்சியர் மணல் கடத்தல் தொடர்பாக திருச்சூழி வட்டாட்சியருக்கு தகவல் அளித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து திருச்சுழி வட்டாட்சியர் காரில் மணல் கடத்திய லாரியை துரத்திச் சென்றபோது துணை வட்டாட்சியர் தனது இரு சக்கர வாகனத்தை சாலையோரமாக நிறுத்தி வைத்து விட்டு சென்றுள்ளார்.