தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 9, 2020, 4:40 PM IST

ETV Bharat / state

தகனம் செய்யப்பட்ட உடலின்மீது பாதி எரிந்த நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு!

விருதுநகர்: ராஜபாளையம் அருகே மயானத்தில் எரிந்துகொண்டிருந்த உடலின் மீது பாதி எரிந்த நிலையில் இளைஞரின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

youth-body-recovered-with-half-burnt-on-cremated-body
youth-body-recovered-with-half-burnt-on-cremated-body

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காயாகுடியாற்று பகுதியில் 29 சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மயானம் (சுடுகாடு) உள்ளது. இதில் நேற்று ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் நெஞ்சுவலி காரணமாக இறந்த நிலையில், அவருடைய உடலை மயானத்தில் தீ மூட்டித் தகனம் செய்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து இன்று (செப்.09) அதிகாலை இறுதி காரியம் செய்வதற்காக உறவினர்கள் மயானம் வந்தநிலையில், அவரது உடல்மீது பாதி எரிந்த நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த ராஜபாளையம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சங்கர், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

காவல் துறையின் விசாரணையில், இறந்தவர் செவல்பட்டி பகுதியைச் சேர்ந்த ராம் சிங் (26) என்பதும், கடந்த 2 நாட்களாக தன்னை யாரோ தாக்க வருவதாகவும், தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் வீட்டில் கூறியுள்ளார். சுடுகாட்டில் இறந்தவர் உடல் எரிந்து கொண்டிருந்தபோது அங்கு சென்ற ராம்சிங் அந்த உடல்மீது படுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து வடக்கு காவல் நிலைய காவல் துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர். தகனம் செய்யப்பட்ட உடலின்மீது, பாதி எரிந்த நிலையில் இளைஞர் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை்; போக்சோவில் தந்தை கைது!

ABOUT THE AUTHOR

...view details