விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர், கோபால் (28). இவர் கட்டட கூலித்தொழிலாளர்.
கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் அப்பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
சிறுமியைப் பின்தொடர்ந்து சென்ற கோபால், அவரின் வாயைத் துணியால் கட்டி, தனிமையான இடத்திற்குத் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தவுடன் கோபால் அங்கு இருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து, மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார்.