தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 4, 2020, 3:07 PM IST

ETV Bharat / state

விருதுநகரில் கரோனா பாதிப்பு 679ஆக அதிகரிப்பு

விருதுநகர் : 65 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 679 ஆக அதிகரித்துள்ளது.

Virudunagar Latest Corona Update
Virudunagar Latest Corona Update

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஏற்கனவே 614 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், மேலும் 65 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக இதுவரை 679 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 296 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 383 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இன்று உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் எண்ணிக்கையைத் தொடர்ந்து, தற்போது வரை விருதுநகர் மாவட்டத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:'இதுதான் எங்க கரோனா‌ மருந்து' - காட்டு எறும்புகளை அரைத்து சாப்பிடும் பழங்குடியின மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details