விருதுநகர் அருகே உள்ள இனாம் ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் ஜெயசூர்யா (18). இவர் சாத்தூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு பயின்றுவருகிறார். இவர் தனது அக்கா கணவர் வேளாங்கண்ணி (34) என்பவருடன் இனம் ரெட்டியாபட்டியிலிருந்து ஆர்.ஆர். நகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் மருளுத்தூர் பிரிவில் பின்னால் வந்த கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தில் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். மேலும் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் மற்றுமொரு இருசக்கர வாகனத்தில் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆர்.ஆர். நகரைச் சேர்ந்த ஏசுதாஸ் (43) என்பவர் பலத்த காயமடைந்தார்.