விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. விவசாயியான இவர் சொந்தமாக தென்னந்தோப்பு வைத்துள்ளார். தோப்பிலிருந்து தேங்காய்களை வெட்டி அதனை டிராக்டரில் போட்டுக்கொண்டு குணவந்தனேரி கண்மாய் கரையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக டிராக்டர் கவிழ்ந்து, கண்மாய்க்குள் கவிழ்ந்து விழுந்தது.
இந்த விபத்தில் புகழேந்தி, கம்மாயில் வேலை செய்து கொண்டிருந்த ஏழு பெண்கள் உள்பட எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.