தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயில் ஆடித் திருவிழா - கரோனாவால் ரத்து! - கரோனா அச்சுறுத்தலால் சதுரகிரியில் அடி அமாவாசை ரத்து

விருதுநகர்: கரோனா அச்சுறுத்தலால் பிரசித்திபெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவை ரத்து செய்து கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அடி அமாவாசை திருவிழா ரத்து அறிவிப்பு
அடி அமாவாசை திருவிழா ரத்து அறிவிப்பு

By

Published : Jul 13, 2020, 10:05 PM IST

Updated : Jul 13, 2020, 10:23 PM IST

விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த சாப்டூர் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படும். இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக சதுரகிரி கோயிலுக்குப் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசை திருவிழா ரத்து அறிவிப்பு

இருப்பினும் கோயிலின் முக்கியத் திருவிழாவான ஆடி அமாவாசை திருவிழா வரும் 20ஆம் தேதி நடைபெறும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர்.

தற்போதும் கரோனா வைரஸ் தொற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆகவே, ஆடி அமாவாசை திருவிழா நடைபெறாது எனவும்; பொதுமக்கள் யாரும் கோயிலுக்கு வர வேண்டாம் என்றும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்க அரச குடும்பத்துக்கு உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம்


Last Updated : Jul 13, 2020, 10:23 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details