தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல்..! - மணல் கொள்ளை

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 டிராக்டர்களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Virudhunagar Sand Theft  Srivilliputhur Sand Theft  ஸ்ரீவில்லிபுத்தூர மணல் கொள்ளை  விருதுநகர் மணல் கொள்ளை  மணல் கொள்ளை
Virudhunagar Sand Theft

By

Published : Jan 8, 2020, 8:50 AM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மாதாநகர், சித்தாலம்புத்தூர் ஆகிய பகுதிகளில் சார்ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் உள்ள நீரோடையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளி ஏற்றி வந்த இரண்டு டிராக்டர்களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்

இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த இருவர் தப்பிச் சென்ற நிலையில், மணல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், தப்பி ஓடிய ஓட்டுநர்கள் யார் என்பது குறித்து நகர காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details