தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவியுடன் சண்டை- தற்கொலை செய்த போலீஸ் - விருதுநகர் காவலர் தற்கொலை

விருதுநகர் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக ஆயுதப்படை ஓட்டுநர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து சூலக்கரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுதப்படை ஓட்டுநர் தற்கொலை: காரணம் என்ன?
ஆயுதப்படை ஓட்டுநர் தற்கொலை: காரணம் என்ன?

By

Published : Mar 29, 2022, 5:18 PM IST

Updated : Mar 29, 2022, 5:30 PM IST

விருதுநகர்: விருதுநகர் ஆயுதப்படை ஓட்டுநராகப் பணிபுரிந்தவர், ராஜிவ் பாண்டி. இவர் மனைவி நிர்மலா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் கடந்த ஆறு மாதம் குடும்பப் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றிரவு(மார்ச் 28) மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளார். ஆயுதப்படை குடியிருப்பில் வசித்துவரும் இவர், மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

ஆயுதப்படை ஓட்டுநர் விஷம் அருந்தி தற்கொலை

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் ராஜிவ் பாண்டியின் உடலை மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் மனோகர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து சூலக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 'கஞ்சா வேட்டையை தொடங்க வேண்டும் - காவல் துறைக்கு டிஜிபி உத்தரவு'

Last Updated : Mar 29, 2022, 5:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details