தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஷம் கலந்த தண்ணீரால் 20 ஆடுகள் உயிரிழப்பு - போலீசார் விசாரணை - Police investigate deaths of goats

விருதுநகர்: சாத்தூர் அருகிலுள்ள நீராவிப்பட்டி கிராமத்தில் 20 ஆடுகள் விஷம் கலந்த தண்ணீரை குடித்து உயிரிழந்தன.

விஷம் கலந்த தண்ணீரை குடித்து 20 ஆடுகள்  உயிரிழப்பு
விஷம் கலந்த தண்ணீரை குடித்து 20 ஆடுகள் உயிரிழப்பு

By

Published : Jan 4, 2020, 5:33 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள நீராவிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராமன் (31). இவர் வேலையில்லாத பட்டதாரியாக இருந்தாலும் 30க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்துவருகிறார். இன்று காலை ஆடுகளை கூட்டிக்கொண்டு காடுகளில் மேய்த்துவிட்டு, மதியம் வீட்டிற்கு திரும்ப அழைத்துக்கொண்டு வந்து தண்ணீர் விட்டு தொழுவில் அடைத்துள்ளார்.

அப்பொழுது ஆடுகள் துடிதுடித்து சுருண்டு விழுந்துள்ளன. இதை கண்டு செய்வதறியாது திகைத்து நின்ற சிவராமன் அருகில் உள்ளவர்களை அழைத்துள்ளார். உடனே அருகில் இருந்த உறவினர்கள் கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்து மருத்துவர்களை வரவழைத்தனர்.

விஷம் கலந்த தண்ணீரை குடித்து 20 ஆடுகள் உயிரிழப்பு

அதற்குள் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் சுருண்டு விழுந்து உயிரிழந்தன. கால்நடை மருத்துவர் வந்து ஆடுகளை பரிசோதனை செய்து விஷம் கலந்த தண்ணீரை ஆடுகள் குடித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இதுகுறித்து இருக்கன்குடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details