தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 10, 2020, 11:00 PM IST

ETV Bharat / state

மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு - ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

விருதுநகர்: தாதம்பட்டி கிராமத்தில் விவசாய நிலங்களில் தனியார் நிறுவனத்தினர் மின்கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்தக் கோரி அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Virudhunagar formers petition
Virudhunagar formers petition

விருதுநகர் அருகே உள்ள தாதம்பட்டி கிராமத்தில் 50க்கும் மேற்பட்டோர் விவசாயம் செய்து வருகின்றனர். இதில் 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களில் அனுமதி இன்றி தனியார் செல்போன் நிறுவனத்தினர் மின்கோபுரம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்தத் தனியார் நிறுவனத்தினர் நில உரிமையாளர்களிடம் எந்தவித முன் அனுமதியும் பெறாமல் தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் மின் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுவருவதால், தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கூறுகின்றனர். ஆகவே இதனை தடுத்த நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details