தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 3, 2020, 9:28 PM IST

ETV Bharat / state

விருதுநகரில் நடைமுறைக்கு வந்த நடமாடும் நுண்கதிர்வீச்சு வாகனம்!

விருதுநகர்:தனியார் கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கு நோயின் தாக்கத்தை அறிந்து கொள்வதற்காக நடமாடும் நுண்கதிர்வீச்சு வாகனம் நடைமுறைக்கு வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Mobile Radiation Vehicle  virudhunagar district news  விருதுநகர் மாவட்டச் செய்திகள்  நடமாடும் நுண்கதிர்வீச்சு வாகனம்
விருதுநகரில் நடைமுறைக்கு வந்த நடமாடும் நுண்கதிர்வீச்சு வாகனம்

கரோனா தொற்றால் பாதிப்படைந்த நோயாளிகளின் பயன்பாட்டிற்காக நடமாடும் நுண்கதிர்வீச்சு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கண்ணன் தலைமையில் சுகாதாரத்துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கண்ணன் கூறுகையில், " விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 8,491 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது 2,431 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

mobile-radiation-vehicle

அரசு மருத்துவமனைகளைத் தவிர தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு நோய்த் தொற்றின் தாக்கத்தை அறிந்து கொள்வதற்காக, நடமாடும் நுண்கதிர்வீச்சு வாகனம் மாநில அரசால் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாகனத்தின் மூலம் பாதிக்கப்பட்ட நபரின் நுரையிரலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அறிந்து கொள்வதோடு, அதற்கு ஏற்ற வகையில் சிகிச்சை முறையை மாற்றிக்கொள்ள முடியும்.

இதன் மூலம் வேகமாக நோயாளிகள் நோய்த் தொற்றிலிருந்து குணமடைய முடியும். எனவே, இன்றிலிருந்து இக்கருவி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அடிப்படை உடற்பயிற்சிகள், மூச்சுப் பயிற்சி போன்றவை வழங்கப்பட்டு வருகின்றது.

இதற்காக, தற்போது முழுமையாக சித்த மருத்துவ மையம் தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள ஒரு மையத்தில் பரிசோதனை முறையில் உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க:விருதுநகர் உழவர் சந்தையில் ஆறு வியாபாரிகளுக்குக் கரோனா தொற்று உறுதி

ABOUT THE AUTHOR

...view details