தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 8, 2020, 9:40 AM IST

ETV Bharat / state

ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

விருதுநகர்: இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் புகையிலை பொருட்கள் பறிமுதல் Virudhunagar Banned Tobacco Seized Banned Tobacco Seized Tobacco Seized
Virudhunagar Banned Tobacco Seized

விருதுநகர் மாவட்டத்தில் நகர், புறநகர்ப் பகுதிகளில் உள்ள கடைகளில் காவல் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கடைகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டறிந்தனர்.

இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் பாண்டியன் நகர், காந்தி நகர் பகுதியிலுள்ள ஜோசப் ராஜா என்பவருக்குச் சொந்தமான குடோனில் கட்டையாபுரம் ஆவலப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (25) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைக் கடைகளுக்கு விநியோகம் செய்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட ஸ்டீபன் ராஜ்

இதையடுத்து, துணை காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையிலான காவல் துறையினர் அங்கு சென்று சோதனையிட்டனர். அதில், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ஸ்டீபன் ராஜை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து விருதுநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆரணியில் ரூ.15 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: 5 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details