தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 14, 2021, 10:46 PM IST

ETV Bharat / state

ஆடுமேய்க்கச் சென்ற தந்தை, மகன் இடி மின்னல் தாக்கி உயிரிழப்பு

அருப்புக்கோட்டை அருகே ஆடுமேய்க்கச் சென்ற தந்தை, மகன் இடி மின்னல் தாக்கி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆடுமேய்க்கச் சென்ற தந்தை மகன் இருவர் இடி மின்னல் தாக்கி உயிரிழப்பு
ஆடுமேய்க்கச் சென்ற தந்தை மகன் இருவர் இடி மின்னல் தாக்கி உயிரிழப்பு

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே சுக்கிலநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தூர் பாண்டி. இவர்களது மகன் ராஜேஸ். இவர் டிப்ளமோ படித்துள்ளார். இந்நிலையில் தந்தையும் மகனும் அருணாச்சலபுரம் கிராமத்திற்கு ஆடு மேய்க்கச் சென்றுள்ளனர்.

அப்போது, பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. மழையில் நனையாமல் இருப்பதற்காக தந்தை, மகன் இருவரும், அங்கிருந்த பெரியண்ணசாமி கோயில் மரத்தடியில் ஒதுங்கியுள்ளனர்.

அப்போது, பலத்த சத்தத்துடன் இடி மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து, அங்கு சென்ற தாலுகா காவல்துறையினர், இருவரின் உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: 'தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறது பாஜக' - திருமாவளவன் தாக்கு

ABOUT THE AUTHOR

...view details