விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அண்ணா நகர் பகுதியில் டைல்ஸ் கடை அமைப்பதற்காக புதியதாக கட்டட வேலை நடைபெற்று வந்தது. பல்வேறு தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது கட்டடத்தில் கான்கிரிட் முட்பிரிக்கும்போது கட்டடத்தின் முன் பகுதியில் இருந்த சுவர் சரிந்து விழுந்ததில் பணியில் ஈடுபட்டிருந்த ஆணைகூட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி (40) கொத்தனார், கட்டட உரிமையாளரின் மகன் டயான்ராஜ் (24) உள்பட இருவரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.