விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தீர்த்தக்கரைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜன் மகன் அஸ்வின் (7), பாலமுருகன் மகன் மலையரசன் (9). கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் விடுமுறையில் இருப்பதால் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வீட்டின் அருகே விளையாடுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று (அக். 26) வழக்கம்போல் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு குப்பையில் கிடந்த பட்டாசு கழிவுகளுக்குத் தீவைத்துள்ளனர். அப்போது கழிவுகள் எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியதில் சிறுவர்கள் இருவரும் பலத்த தீக்காயமடைந்து அலறித்துடித்துள்ளனர்.