தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டாசு ஆலை வெடி விபத்து: மூவர் படுகாயம் - crackers fire accident in aathur

விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இரண்டு பெண்கள் உட்பட மூவர் சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சைக்கு பெற்று வருகின்றனர்.

பட்டாசு ஆலை வெடி விபத்து: மூவர் படுகாயம்

By

Published : Oct 23, 2019, 7:08 AM IST


விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சிவகாசி அருகே ஆத்தூரில் அதிரூபன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. சுமார் 100க்கும் மேற்பட்ட அறைகள் உள்ள இந்த பட்டாசு ஆலையில், பேன்சி ரக பட்டாசு வகைகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து

இந்நிலையில் அந்த பட்டாசு ஆலையில் கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்த சுதா, மேட்டூர் பகுதியைச் சேர்ந்த முருக சரஸ்வதி, திருவேங்கிடபுரத்தைச் சேர்ந்த கணேசன், ஆகிய மூவரும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு மருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென அங்கு வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மேலும் தீ பரவாமல் தடுத்தனர். இந்த வெடி விபத்தில் படுகாயமடைந்த சுதா, முருக சரஸ்வதி, கணேசன் ஆகிய மூவரும் சிவகாசியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மாரனேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படியுங்க:

ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் சிறை!

ABOUT THE AUTHOR

...view details