தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாட்டிற்காக தங்கம் வென்றவர் தற்போது வறுமையால் அரசை நாடியுள்ளார்! - மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

விருதுநகர்: தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற விளையாட்டு வீரர் மத்திய, மாநில அரசு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

national gold winner

By

Published : Nov 5, 2019, 9:46 PM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்த விவசாயி கணேசனின் மகன் இசக்கிமுத்து. பி.ஏ. பட்டம்பெற்று தற்போது உடற்கல்வி ஆசிரியர் துறையில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

கடந்த 2018 ஜூன் மாதம் பூடானில் நடைபெற்ற தெற்காசிய கிராமப்புற விளையாட்டுகளில் தமிழகத்தின் பிரதிநியாகவும், இந்திய கபடி அணிக்கு கேப்டனாகவும் பங்கேற்று விளையாடி தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

இந்திய கபடி அணிக்கு கேப்டனாக இருந்த இசக்கிமுத்து

விவசாயக் குடும்பத்தில் படித்து முதல் முறையாக பட்டம் பெற்ற இசக்கிமுத்து, தற்போது குடும்ப வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதால் தன்னை மத்திய அரசு அல்லது மாநில அரசு துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பணியமர்த்துமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இதையும் படிங்க:பாகிஸ்தானை பந்தாடியது ஆஸ்திரேலியா; தொடரில் முன்னிலை!

ABOUT THE AUTHOR

...view details