தமிழ்நாடு

tamil nadu

கேஸ் சிலிண்டர் திருடும் வைரல் சிசிடிவி காட்சி!

By

Published : Mar 26, 2020, 2:47 PM IST

விருதுநகர்: தேநீர் கடையில் கேஸ் சிலிண்டரை நூதன முறையில் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Tn vnr cylinder theft விருதுநகர் சிலிண்டர் திருட்டு சிலிண்டர் திருட்டு தேனீர் கடை சிலிண்டர் திருட்டு Virudhunagar Cyclinder Theft Cyclinder Theft Tea shiop Cyclinder Theft
Cyclinder Theft

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நேதாஜி சாலையில் 15 வருடங்களாக தேநீர் கடை நடத்தி வருபவர் பரமசிவம். கடந்த 21ஆம் தேதி கரோனா வைரஸ் முன்னேச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்தது. அப்போது, இவர் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைக்காகத் தேநீர் கடையைத் திறந்து வைத்துள்ளார்.

பின்னர் இரவு நேரத்தில் சாலையில் யாரும் இல்லாததால் அவர் கடையை விட்டு வெளியே சென்றிருந்தபோது அருகிலிருந்த பாத்திரக்கடையில் இருந்தவர்கள் தேநீர் கடையில் உள்ள கேஸ் சிலிண்டரை கோனிப்பையை வைத்து நூதன முறையில் திருடி யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கும் காட்சி எதிரே இருக்கும் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சிலிண்டர் திருடும் வைரல் சிசிடிவி காட்சி

இதையும் படிங்க:ஏடிஎம்மில் மற்றொருவர் பணத்தை லாவகமாக எடுத்த நபர்

ABOUT THE AUTHOR

...view details