தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியரசு தினத்தை புறக்கணித்த அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் - சாத்தூர் அரசு கலைக் கல்லூரி நடந்த சம்பவம்

விருதுநகர்: சாத்தூர் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் குடியரசு தினத்தை புறக்கணித்தால் கல்லூரி வளாகமே வெறிச்சோடி காணப்பட்டது.

republic day
republic day

By

Published : Jan 26, 2020, 7:14 PM IST

71ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் சிறப்பான முறையில் கொண்டப்பட்டது. அந்த வகையில், விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 71ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ரா. கண்ணன் கொடி பறக்கவைத்தார். பின்னர் காவல் துறையினரின் சிறப்பான அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியின் இறுதியாக பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிலையில் சாத்தூர் அரசு கலைக் கல்லூரியில் குடியரசு தினத்தை மாணவர்கள் புறக்கணித்தால் கல்லூரி வெறிச்சோடி காணப்பட்டது. ஆயிரத்து 200 மாணவ, மாணவிகள் பயிலும் இக்கல்லூரியில் 200-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.

விருதுநகரில் குடியரசு தின கொண்டாட்டம்

மாணவர்கள் எவரும் வராததால் குடியரசு தினத்திற்கு கொடியேற்ற 10.30-க்கு மேல் கல்லூரியின் அலுவலர் இருவர் வந்து கொடியினை அவிழ்த்து பறக்கவிட்டுச் சென்றனர்.

இதையும் படிங்க: குடியரசு தினமான இன்று அஸ்ஸாமில் குண்டுவெடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details