தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் பரிசு வாங்குவதற்கு நின்ற மக்களைத் தள்ளிவிட்ட ஊழியர்: காணொலி வைரல் - நியாய விலை கடையில் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்கு நின்ற பொதுமக்களை ஊழியர் தள்ளிவிடும் காட்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் நியாயவிலைக் கடையில் பொங்கல் பொருள்கள் வாங்குவதற்கு நின்றுகொண்டிருந்த பொதுமக்களை ஊழியர் தள்ளிவிடும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

By

Published : Jan 7, 2022, 6:30 PM IST

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி தெருவில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுப்பொருள்கள் தொகுப்பு வாங்குவதற்கு நின்றுகொண்டிருந்த பொதுமக்களை ஊழியர் ஒருவர் தள்ளிவிடும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுப்பொருள்கள் தொகுப்பு கடந்த 4ஆம் தேதிமுதல் வழங்கப்பட்டுவருகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.

இதனையடுத்து கடை ஊழியர் கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த பெண்களைத் தள்ளிவிட்டுள்ளார். இதனை ஒருவர் தனது கைப்பேசியில் காணொலி எடுத்துள்ளார். அந்தக் காட்சியை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.


இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:திமுக ஆட்சியில் வழங்கப்படும் பொங்கல் பரிசை வைத்து என்ன செய்ய முடியும்? - ஓபிஎஸ்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details