ஒவ்வொரு ஆண்டும் யானைகள் புத்துணர்வு நலவாழ்வு முகாம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் 48 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்குரிய யானைகள் புத்துணர்வு நலவாழ்வு முகாம் வருகிற 8ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த முகாமில் பல்வேறு கோயில் யானைகள் சில தனியார் யானைகள் உள்பட ஏராளமான யானைகள் பங்கேற்பது வழக்கம். தற்போது கோவிட் பாதிப்பு காரணமாக மனிதர்களுக்குப் பரிசோதனை செய்வதுபோல் முகாமில் பங்கேற்க உள்ள யானைகள் அனைத்திற்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டது.
அந்த உத்தரவின் அடிப்படையில், முகாமில் பங்கேற்கும் அனைத்து யானைகளுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளும் பணி நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவிற்கும் கோவிட் பாதிப்பு உள்ளதா எனப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.