விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ராக்காச்சி அம்மன், பேச்சியம்மன் கோயில் பகுதி நீரோடைகளிலும், வழுக்குப் பாறை அருவிகளிலும் தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அதிகமான சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் அருவிக்கு வந்து குளிக்கின்றனர்.
இதையறிந்த சமூக விரோதிகள் சிலர் சுற்றுலாப் பயணிகளுக்கும் மற்றும் வனவிலங்குகளுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் விதமாக தடைசெய்யப்பட்ட பொருள்களை கொண்டு செல்வது, மது அருந்துவது மது அருந்திய பாட்டில்களை உடைத்து வன விலங்குகளுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக வனப்பகுதியில் போடுவது உள்ளிட்ட செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.