தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜபாளையத்தில் ஒரு லட்சம் பறிமுதல்! - உரிய ஆவணம் இன்றி

ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் ரூ.99,100 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவந்த 99, 100 ரூபாய் பறிமுதல்
வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவந்த 99, 100 ரூபாய் பறிமுதல்

By

Published : Apr 5, 2021, 3:35 PM IST

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சிவமுருகலிங்கம் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த முத்துகிருஷ்ணராஜா என்பவரை நிறுத்தி சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.99,100-ஐ தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

அந்தப் பணத்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் கலைச்செல்வியிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: ’பொத்தானில் குத்துகையில் கவனம் கொள்வோம்’ - பார்த்திபன் ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details