பிட் இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்களின் மனதை செம்மைப்படுத்தும் விதமாக நேரு யுவகேந்திரா மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை, விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினரும் காங்கிரஸ் கட்சி கொறடாவுமான மாணிக்கம் தாக்கூர் வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். பணபலத்தை மட்டுமே நம்பி தேர்தலில் நிற்கும் அதிமுக படுதோல்வி அடையும் என்றார்.