தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓடைநீரை கடக்க தவிக்கும் மக்கள்: பாலம் அமைக்க கோரிக்கை - bridgeless people in Chengulam village

விருதுநகர்: செங்குளம் கிராமத்தில் உள்ள கால்வாயைக் கடக்க பாலம் அமைக்கக்கோரி அக்கிராம மக்கள் வட்டாட்சியரிடம் கோரிக்கைவைத்தனர்.

Request to build a bridge in Chengulam village

By

Published : Nov 2, 2019, 9:20 AM IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செங்குளம் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்கிராமத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் நீர்ப்பாசன வசதிக்கு பயன்படுத்தும் கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாயிலிருந்து வெளியேறும் உபரிநீர் இந்த கிராமத்தின் கிழக்குப் பகுதி குடியிருப்புக்கும் மேற்குப் பகுதி குடியிருப்புக்கும் நடுவில் அமைந்துள்ள நீரோடை வழியாகச் செல்கிறது.

செங்குளம் கிராமத்தில் பாலமின்றி தவிக்கும் மக்கள்

அனைத்து குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரும் மழைநீரும் இந்த நீரோடை வழியாகவே செல்கிறது. இந்த ஓடை வழியாகத்தான் விவசாய நிலங்களுக்கு வாகனங்கள் செல்கின்றன. மேலும் அப்பகுதியில் உள்ள பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் இந்த ஓடையை கடந்து செல்ல வேண்டும். மேலும் இந்த ஓடை முழுவதும் குப்பைகளும் புதர்களும் சூழந்து ஆங்காங்கு தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேட்டினை உருவாக்கும் அபாயகரமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால் அக்கிராம மக்கள், ஓடையை சரிசெய்து பாலம் அமைக்க வேண்டி அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த மனுவை பெற்ற வட்டாட்சியர் பழனிச்சாமி அப்பகுதியை பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னரே அம்மக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

இதையும் படியுங்க:

ஜெயம் ரவி-25 வெளியானது 'பூமி'யின் பர்ஸ்ட் லுக்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details