தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 12, 2021, 11:34 AM IST

ETV Bharat / state

கடன் தொல்லை: ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

விருதுநகர்: சாத்தூர் அருகே கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேவுள்ள அண்ணாநகரைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவரது, மகன் ஜெயராஜ் (50) ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். கரோனா தொற்று காரணமாக ரியல் எஸ்டேட் தொழில் மிகவும் நலிவடைந்த நிலையில் ஜெயராஜ் செய்துவந்த ரியல் எஸ்டேட் தொழிலில் மிகவும் நஷ்டம் ஏற்பட்டது.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட ஜெயராஜ் பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை அடைக்க முடியாமலும், அதற்கு வட்டிகட்ட முடியாமலும் மிகுந்த சிரமத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், கடன் தொல்லையால் சில நாள்கள் மன உளைச்சலில் இருந்த ஜெயராஜ் இன்று (பிப். 12) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா காவல் துறையினர் ஜெயராஜின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தூத்துக்குடி ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் விளையாட்டு: மன உளைச்சலில் மாணவன் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details