தமிழ்நாடு

tamil nadu

அரசு விழாவில் பலூனை இழுத்து விளையாடிய ராஜேந்திர பாலாஜி

By

Published : Dec 31, 2020, 5:41 PM IST

விருதுநகரில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பலூனை இழுத்து விளையாடினார்.

விருதுநகர்
விருதுநகர்

விருதுநகரில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மாவட்ட ஆட்சியர் கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "விருதுநகர் மாவட்டத்தில் இன்றுமுதல் அனைத்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவச மிதிவண்டி வழங்கப்படும். இத்திட்டத்தினை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

மாணவர்கள் யாரும் இடை நிற்றல் செய்து விடக்கூடாது என எண்ணி கல்வித்துறைக்கு தமிழ்நாடு அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது. கல்வியில் சிறந்த மாவட்டமாக 25 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம் கல்வியில் முன்னோடியாக இருக்கின்றது” என்றார்.

மீண்டும் பலூன் விளையாட்டு

பின்னர் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பலூனை பிடித்து இழுத்து விளையாடினார். இது அங்கு இருந்த அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.

அரசு விழாவில் பலூனை இழுத்து விளையாடிய ராஜேந்திர பாலாஜி

இரண்டு வாரங்களுக்கு முன்னர் விருதுநகரில் நடைபெற்ற அம்மா மினி கிளீனிக் திறப்பு விழாவின் போதும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பலூனை உடைத்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வண்ணமிகு பலூன் திருவிழா!

ABOUT THE AUTHOR

...view details