தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 2, 2020, 11:32 AM IST

ETV Bharat / state

கிடா வெட்டில் தகராறு - ஆறு பேருக்கு வெட்டு

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிடா வெட்டி சமைத்துபோது இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தாணிப்பாறை செல்லும் வழியில் தனியார் தோப்பில் சுந்தரபாண்டியம் பகுதியை சேர்ந்த இரு தரப்பினர் கிடா வெட்டி விருந்து சாப்பிட்டுள்ளனர். அப்போது கூமாப்பட்டி பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் குடிபோதையில் அதிகமாகப் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் குடிபோதையில் இருந்த ஒரு தரப்பினர் அரிவாள் மற்றும் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு மற்றொரு தரப்பினரை தாக்கியுள்ளனர்.

இம்மோதலின் காரணமாக குருவம்மாள், பாரதி, பால்சாமி, வனராஜ், ராஜ்குமார் உள்பட 6 பேர் படுகாயமடைந்து வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வத்திராயிருப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:ஒரேநாளில் இருவர் விஷம் குடித்து தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details