தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊராட்சி ஒன்றிய மறைமுக தேர்தல்; பலத்த போலீஸ் பாதுகாப்பு - ஊராட்சி ஒன்றிய மறைமுக தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

விருதுநகர்: ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மறைமுக தேர்தலை முன்னிட்டு அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களில் தகராறு ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

indirect election
indirect election

By

Published : Jan 11, 2020, 4:52 PM IST

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய பெருந்தலைவர், துணைத் தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றுவருகிறது.

ஊராட்சி ஒன்றிய மறைமுக தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

அதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், வெம்பக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ளாட்சி ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய துணை தலைவர்களுக்கு மறைமுக தேர்தலும், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைth தலைவர் தேர்வும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களில் தகராறு ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மறைமுக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, திமுக இடையே மோதல் - டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு

ABOUT THE AUTHOR

...view details