விருதுநகர் ரயில் நிலையத்தில் பழனி செல்வதற்காக வந்தவர் ஜோதி கார்த்திகேயன். இவர் பயணச்சீட்டைப் பெற்றுகொண்டு அங்கு ரயிலுக்காக காத்திருந்தார்.
அப்போது தீடீரென அவர் நெஞ்சில் கையை வைத்தபடி மயங்கிவிழுந்துள்ளார். அதனைக் கண்ட சக பயணிகளும், காவல் துறையினரும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் அவருக்கு முதலுதவி செய்ய யாரும் முன்வரவில்லை.
அரைமணி நேரமாக ஜோதி கார்த்திகேயன் உயிருக்குப் போராடியுள்ள நிலையில் ரயில்வே ஊழியர்கள் அவரை ஆட்டோ மூலமாக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.