விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கே.சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவரது மனைவி அழகம்மாள் (58). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். அழகம்மாள் நேற்று காலை (அக்.13) 100 நாள் வேலைக்கு சென்றுவிட்டு, வேலை முடிந்து திரும்பிய பிறகு தனது தோட்டத்தில் கருவேப்பிலை செடிக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார்.
இதையடுத்து மோட்டார் சுவிச் போடும்போது கால் வழுக்கி கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதை அறியாத அவரது உறவினர்கள், 100 நாள் வேலைக்குச் சென்ற அழகம்மாள் மாலை வரை வீடு திரும்பவில்லை என்று நினைத்து தேடினர்.