தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரண்டு குழந்தையை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தாய் தற்கொலை!

விருதுநகர்: சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தில் தனது இரண்டு குழந்தைகளை கிணற்றில் தள்ளி விட்டு தாயும் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இரண்டு குழந்தையை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தாய் தற்கொலை
இரண்டு குழந்தையை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தாய் தற்கொலை

By

Published : Jun 4, 2021, 6:16 PM IST

சாத்தூர் அருகே உள்ள ஒ.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர நாராயணன் (31). இவரது மனைவி செல்வி (26). இவர்களுக்கு அனுஷ்கா (5) என்ற மகளும், மாதேஸ் (3) என்ற மகனும் உள்ளனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சங்கர நாராயணன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இந்நிலையில், இன்று (ஜூன்4) மனைவி செல்வி அதே கிராமத்தைச் சேர்ந்த பொன்பாண்டி என்பவருக்குச் சொந்தமான காட்டுப்பகுதியில் உள்ள கிணற்றில் தனது இரண்டு குழந்தைகளையும் வீசிக்கொன்றுவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த சாத்தூர் கதிரேசன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கிணற்றில் இறங்கி 2 குழந்தைகள், தாயை சடலமாக மீட்டனர்.

உடல்களைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாத்தூர் காவல்துறையினர் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றார்.

இதையும் படிங்க: பொறியியல் மறுதேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் - அண்ணா பல்கலைக்கழகம் வெளீயிடு

ABOUT THE AUTHOR

...view details