ராஜபாளையத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ” புயல் பாதித்த பகுதிகளிலும் ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைத்துள்ளது. நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, கொட்டும் மழையிலும் மக்களை பாதுகாக்கும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் பாதுகாப்பு கவசம் அணிந்து, முதல்வரை பார்த்து வேறு வழியின்றி நேரில் சென்று பார்வையிடுகிறார். அது சேவை அல்ல. தேர்தல் வருகிறது என்கிற தேவையால் பார்வையிட்டுள்ளார்.