விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நடுவப்பட்டி, ஈஞ்சார் பகுதிகளில் உள்ள கண்மாய்களில் 60 லட்சம் மதிப்பீட்டிலான குடிமராமத்து பணிகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விருதுநகர் மாவட்டம் முழுவதும் 54 கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது எனவும், இதன்மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது எனவும் கூறினார். மதுக்கடைகளை அரசு விரும்பி திறக்கவில்லை என்ற அவர், மதுக்கடைகளை குறைக்கும் நடவடிக்கைகளில் முதலமைச்சர் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.