விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் யானை, புலி, மான், காட்டெருமை, சாம்பல் நிற அணில் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. ஊரடங்கு காரணமாக ஆள் நடமாட்டமில்லாத சரணாலயப் பகுதிக்குள் நுழையும் சமூக விரோதிகள் வனவிலங்குகளை வேட்டையாடுவது தொடர் கதையாகியுள்ளது.
இந்நிலையில் இன்று (ஜூன் 28) ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த நகர் காவல் நிலைய ஆய்வாளர் கருத்தப்பாண்டி மற்றும் குழுவினர் சந்தேகத்திற்கிடமான இருசக்கர வாகனத்தில் வந்த நபரை விசாரணை செய்ததில் 50 கிலோ மான் கறி இருந்தது தெரியவந்தது.