இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐய்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான க.பெ. ரணசிங்கம் திரைப்படம் கடந்த 2ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தை பதிவிறக்கம் செய்து ராஜபாளையம் பீமராஜா சாலையில் தனியார் பள்ளிக்கட்டிடத்தில் செயல்படக்கூடிய கேபிள் டிவியில் ஒளிபரப்பு செய்துள்ளனர். இதை விஜய் சேதுபதியின் ரசிகர்கள் செல்போனில் வீடியோ எடுத்து விஜய் சேதுபதி, இயக்குநருக்கு அனுப்பி உள்ளனர்.
அதனடிப்படையில் சென்னையிலிருந்து வந்த இயக்குநர் விருமாண்டி, கதை ஆசிரியர் சண்முகம் உள்ளிட்டோர் கேபிள் டிவி செயல்பட்ட தனியார் பள்ளிக்குச் சென்று ஒளிபரப்பு செய்த கம்ப்யூட்டர் மற்றும் ஹார்டிஸ்க் போன்ற பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் தனியார் பள்ளி நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்ய புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன், படத்தை ஒளிபரப்பு செய்த உள்ளூர் கேபிள் டிவி பணியாளர்கள், பள்ளி தாளாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.