பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 58ஆவது குருபூஜை விழா நாளை (அக்டோபர் 30) அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், குருபூஜையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியைய்யா தலைமையில், அருப்புக்கோட்டையில் காவல்துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.