விருதுநகர்:விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு ஆப்ரேசன் தியேட்டர் மற்றும் எக்கோ இயந்திரத்தை தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரியின் முதல்வர் சங்குமணி மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், அலுவலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சங்குமணி, 'விருதுநகர் மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையில் இருந்தபோது, கட்டில் உடைந்து பிறந்து 5 நாளே ஆன குழந்தைக்கு காயம் ஏற்பட்ட விவகாரத்தில் 3 மருத்துவர்கள் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்தக் குழு விசாரணை முடிந்து இரண்டு நாட்களில் அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது' என அவர் தெரிவித்தார்.