தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகரில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு!

விருதுநகர்: அடையாளம் தெரியாத பெண் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டதையடுத்து, இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

By

Published : Oct 2, 2020, 12:16 AM IST

In Virudhunagar, unknown women body rescued from well
In Virudhunagar, unknown women body rescued from well

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் செல்லும் சாலை ஓரம் உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதாக ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் வந்தது.

அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டனர். இதனையடுத்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய காவல் துறையினர் மீட்கப்பட்ட பெண் உடலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும் இந்தப் பெண் யார், எதற்காக இங்கு வந்தார், தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலைசெய்து யாரும் இங்கு கொண்டுவந்து போட்டார்களா? என்ற கோணத்தில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க...புனித பூமியான இந்தியா பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக மாறியுள்ளது - உயர் நீதிமன்றம் வேதனை!

ABOUT THE AUTHOR

...view details