தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 3, 2019, 12:01 PM IST

ETV Bharat / state

கனமழையால் பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

விருதுநகர்: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

heavy-rain-cause-increase-in-pilavakkal-dam-water-level
heavy-rain-cause-increase-in-pilavakkal-dam-water-level

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் கண்மாய்கள் வேகமாக நிரம்பிவருகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டத்தின் முக்கிய அணையான பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பிளவக்கல் பெரியாறு அணை

இந்த அணையின் நீர்வரத்து 50 கன அடியிலிருந்து 100 கன அடியாக உயர்ந்து கொண்டிருப்பதால்,100 கன அடியாக வெளியேற்றுப்பட்ட வந்த நீர், தற்போது 200 கனஅடி வெளியேற்றப்பட்டு வருகிறது. மொத்தம் 47 அடியான அணையின் நீர் மட்டம் தற்போது 39 அடியாக உள்ளது.

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: பராமரிக்கப்படாத அணைக்கட்டு; பரிதவிக்கும் விவசாயிகள்!

ABOUT THE AUTHOR

...view details