விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மீன் வியாபாரி ஒருவர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவில்லிபுத்தூரில் 15-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள், தனியார் பார்கள் உள்ளன. அதில் சிலவற்றில், அரசு அனுமதித்த நேரத்தைவிட அதிகப்படியான நேரம் மது விற்கப்படுகிறது.
அதன்படி இன்று காலை வன்னியம்பட்டி விளக்கு அருகே காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த அத்திகுளத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். காவல் துறையினரைக் கண்ட செல்வராஜ், சிறிது இடைவெளியில் வாகனத்தை போட்டுவிட்டு அங்கிருந்து ஓடி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் சென்று தான் விஷமருந்திவிட்டதாகக் கூச்சலிட்டுள்ளார்.