தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜபாளையம் அருகே விவசாயி வெட்டிக்கொலை - விருதுநகர் மாவட்டச் செய்திகள்

விருதுநகர்: ராஜபாளையம் அருகே விவசாயி ஒருவர் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

rajapalayam
rajapalayam

By

Published : Jan 29, 2020, 7:37 PM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேசிகாபுரத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் (55). முன்னாள் ஊர் நாட்டாமையான இவர், நேற்று மாலை தேசிகாபுரத்திலிருந்து முறம்புப் பகுதிக்கு தேநீர் குடிக்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

பின்னர், இரவு 7.30 மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அவரை, தேசிகாபுரம் சாலையில் கும்பலாக வந்த சிலர் வழிமறித்து கீழேத் தள்ளி சரமாரியாக வெட்டிக் கொலைசெய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதையடுத்து தகவலறிந்து காவல் துறையினர் அங்கு விரைந்து உடலைக் கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: சுலைமானி கொலைக்கு காரணமான சிஐஏ அலுவலர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details