விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளத்தில் 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து மாநில பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கிவைத்தார். அதற்கு முன்னதாக அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் மரியாதை செலுத்தினார்.
தேர்தல் பரப்புரையில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளாராக யாரை அறிவித்தாலும் அவரை இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஊழல் பற்றி பேசுவதற்கு திமுக தலைவர் ஸ்டாலினுக்குத் தகுதி இல்லை. ஸ்டாலின் தனது சொத்துப் பட்டியலை வெளியிட வேண்டும். இந்தத் தேர்தலிலும் அவர் ஏமாளியாகத்தான் போவார். எந்தக் காலத்திலும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆக முடியாது. ஸ்டாலின் தன்னை விளம்பரப்படுத்துவதற்காக 350 கோடி ரூபாயை பிரசாந்த் கிஷோரிடம் கொடுத்துள்ளார்.