விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை ஈஸ்வரன் (45). இவர் 13ஆவது வார்டு திமுக ஒன்றிய கவுன்சிலராக இருந்தார்.
கடந்த ஆண்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியாக அண்ணாமலை ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆறு மாதத்திற்கு முன்பு அண்ணாமலை ஈஸ்வரன் பிணையில் வெளியே வந்தார்.
தொடர்ந்து, இன்று (ஏப்ரல்.14) தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அவர் சேத்தூர் கரையடி விநாயகர் கோயிலுக்குச் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் அண்ணாமலை ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.