தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 29, 2020, 5:24 PM IST

ETV Bharat / state

மார்கழி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேவுள்ள சதுரகிரி கோயிலில் மார்கழி பவுர்ணமியை முன்னிட்டு இன்று (டிச.29) ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்
சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேவுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தரை மட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு அமாவாசை 4 நாள்கள், பெளர்ணமி 4 நாள்கள் என மொத்தம் 8 நாள்கள் மட்டும் பக்தர்கள் செல்ல வனத் துறை சார்பில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கோயிலில் குவிந்த பக்தர்கள்:

இந்நிலையில் மார்கழி பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 27ஆம் தேதி முதல் நாளை வரை மொத்தம் 4 நாள்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்

இதைத் தொடர்ந்து, இன்று (டிச.29) மார்கழி பௌர்ணமி என்பதால் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: திருநெல்வேலி செப்பறை அழகிய கூத்தர் கோயில் தேரோட்டம்!

ABOUT THE AUTHOR

...view details